Sunday, December 23, 2012

New Year Predictions 2013 _ கன்னி ராசி


2013 ஆண்டு பலன்கள் கன்னி ராசி



வாழ்க்கையின் கடமைகளிலிருந்தும் லட்சியங்க ளிலிருந்தும் தவறாமல் வாழவிரும்பும் கன்னி ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் வீட்டில் ஆண்டு கோளான குருபகவான் வரும் 28-05-2013 வரை சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கை கூடும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் லாபங்களைப் பெறுவீர்கள். 2ம் வீட்டில் ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இதுமட்டுமன்றி ஏழரை சனியில் பாதசனி தொடருவதும் குடும்பத்தில் பிரச்சனைகளையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். வரும் 28-05-2013 முதல் குரு ஜீவனஸ்தானமான 10ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் ஆண்டின் பிற்பகுதியில் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கடன் களும் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்

ஜென்ம ராசிக்கு 2ம் வீட்டில் சனிராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள பெரியவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் மன நிம்மதியும் குறைவடையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் சனிராகுவும் 8ம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்க ளாலும் மனநிம்மதி குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆண்டின் தொடக்கத்தில் குருபாக் கியஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கம். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சி தரும்.

 கொடுக்கல் வாங்கல்

மே மாதம்வரை குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து கொடு க்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கவனமுடன் செயல்படுவதும் பிறருக்கு வாக்குறுதிகள் முன் ஜாமீன் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மே மாதம் வரை லாபங்கள் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனி தொடருவதால் கூட்டாளிகளால் வீண் பிரச்சனை களை சந்திப்பீர்கள். தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆண்டின் தொடக்க த்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவையும் குறைத்துக் கொள்ளமுடியும். சிலநேரங்களில் சிலர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும்.

 அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவைப் பெற அவர்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. உங்கள் பெயர் புகழுக்கு பங்கம் விளைவிக்க பலர் காத்திருப்பார்கள். பத்திரிகையாளர்கள் இளப்பும், வீண் வதந்திகளால் உங்கள் பதவிக்கே ஆபத்து வரும். உடனிருப்பவர்க ளிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களும் குறையும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராகத தானிருக்கும். பட்டபாட்டிற்கான பலனை பெறமுடியும். கால் நடைக ளுக்கு உண்டாககூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். அரசு வழியில் சிறுசிறு ஆதாயங்கள் கிடைக்கும். அதிக உழைப்பினால் மருத்தவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

 பெண்களுக்கு

கணவன் மற்றம் உறவினர்களிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். பேச்சில் நிதான த்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.

படிப்பு

கல்வியில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக கூடிய கூ+ழ்நிலை ஏற்படும் காலமாகும். குடும்பத்தில் நடக்ககூடிய பிரச்ச னைகளை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல் படிப்பில் ஈடுபாட்டை காட்டுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வாழ்க்கைப் பாதையும் மாறிப்போகும் என்பதை மனதில் வைப்து நல்லது.

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ஷேர் போன்றவறில் ஆண்டின் முற்பகுதியில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும்.

ஜனவரி

நல்ல ஞாபக சக்கியும், எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் பாதசனி நடைபெறுகிறது. இது சாதக மற்ற அமைப்பாகும். அதுமட்டுமன்றி சர்பகிரக ங்களான ராகு 2லும் கேது 8லும் சஞ்சரிக்கின்றனர். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உறவின ர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்படும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்;. உடல் ஆரோக்கியம் பாதிப் படையும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 18-01-2013 இரவு 11.48 மணி முதல் 
21-01-2013 காலை 10.16 மணிவரை

பெப்ரவரி

இயற்கை அழகை மெய்மறந்து ரசிக்கும் ஆர்வம் கொண்ட உங்களுக்கு 2ல் சனிராகு சஞ்ச ரிப்பது குடும்பத்தில் நிம்மதிக்குறைவை உண்டா க்கம் என்றாலும் 6ல் செவ்வாயும் 9ல் குருவும் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பணவர வுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்க ளும் சேரும். பூர்வீக வழியில் அணுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். துர்க்கை அம்மனை வழிப டவும்.
சந்திராஷ்டமம் 15-02-2013 காலை 07.09 மணி முதல்
  17-02-2013 மாலை 05.28 மணிவரை

மார்ச்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற ஒழுக்க நெறிகளை கொண்ட உங்களுக்கு 6ல் சூரியன், 9ல் குரு சஞ்சரிப்பது மூலம் எடுக்கும் முயற்சி களில் வெற்றிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைத் தடையின்றிப் பெற முடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகி ழ்ச்சியளிக்கம். பொன், பொருள் சேரும். வம்பு வழக்கு களில் தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக அமையும். பொருளாதார மேம்பாடுகளால் கொடுக்கல், வாங்க லும் சிறப்படையும். குடும்பத்திலுள்ளவர்களை அனு சரித்து செல்லவும்.
சந்திராஷ்டமம் 14-03-2013 மதியம் 02.40 மணி முதல் 
16-03-2013 இரவு 12.34 மணிவரை

ஏப்ரல்

எந்த விஷயத்திலும் பிறரை கலந்த ஆலோசித்து முடிவெடுக்கும் உங்களுக்கு 2ல் ராகுவும் 7ல் சூரியன் செவ்வாயும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதே நிணைத்து செய்யும் காரியங்களிலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் நடை பெறும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்த ப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்தவ செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களால் பிரச்சனை உண்டாகும். முருகப் பெருமானை வழிபடவும். 
சந்திராஷ்டமம் 10-04-2013 இரவு 09.53 மணி முதல் 
13-04-2013 காலை 07.40 மணிவரை

மே

தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலங்களை அடைவீர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும் முருகனையும், சிவனையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-05-2013 காலை மணி முதல் 
10-05-2013 மதியம் 02.57 மணி வரை

ஜூன்

எப்பொழுதும் குஷியாகவே வாழவிரும்பும் உங்களுக்கு 9ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னே ற்றமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும். என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும், குடும்பத்திலு ள்ளவர்கிடையே ஒற்றுமை குறைவும் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கொடு க்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் 04-06-2013 மதியம் 12.58 மணி முதல் 
06-06-2013 இரவு 10.22 மணி வரை

ஜூலை

பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள் விரும்பும் உங்களுக்கு இம்மாத முற்பகுதிவரை 10ல் சூரியன் செவ்வாயும் 11ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும், எதிலும் முன்னேறற்றமடையக் கூடிய அளவிற்கு லாபம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையே இருக்கம். கடன்கள் குறையும்
சந்திராஷ்டமம்   01-07-2013 இரவு 08.44 மணி முதல் 
                 04-07-2013 அதிகாலை 05.51 மணி வரை.      
                          29-07-2013 அதிகாலை 04.26 மணி முதல்        
                      31-07-2013 காலை 01.22 மணி வரை

ஆகஸ்ட்
எவ்வளவு அவசரமானதாக இருந்தாலும் பிறரின் நலம் கருதி செயல்படும் உங்களுக்கு, 10ல் செவ்வாயும் 11ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்றமளிப்பதாகவே அமையும். தொழில் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அரச வழியிலும் நற்பலன்கள் உண்டா கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடாதிருந்தால் விரயமின்றி சமாளிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சனிக்குரியபரிகா ரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம 25-08-2013 மதியம் 12.06  மணிமுதல் 
27-08-2013 இரவு 08.46 மணிவரை

செப்டம்பர்

சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிய மைத்துக்கொள்ளும் உங்களுக்க 2ல் சனி   ராகு சஞ்சரித்தாலும் லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு முன்னேற்ற மடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று நெருக்கடியான காலம் என்பதால் உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணவர வுகள் சுமாராகத்தானிருக்கும். முடிந்தவரை ஆடம் பர செலவுகளை செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21-09-2013 மாலை 07.41 மணிமுதல் 
24-09-2013 அதிகாலை 04.01 மணிவரை.

அக்டோபர்

பேச்சிலும் செயலிலும் பிறர் மனதை புண்ப டுத்தி விரும்பாத உங்களுக்கு ஜென்ம ராசியியில் சூரியனும், 2ல் சனிராகுவும் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவதும், முன்னேற்றத் ;தைக் குறைப்பதும் நல்லது. பணவரவுகளில் நெருக்க டிகள் இருக்காது. தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்தாலும் பெரிய முத லீடுகளை ஈடுபடாதிருப்பது நல்லது. உத்தியோக ஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கம். தட்சிணாமூர்த்தியை வழி படவும்.
சந்திராஷ்டமம் 19-10-2013 அதிகாலை 03.14 மணிமுதல் 
21-10-2013 காலை 11.21 மணிவரை

நவம்பர்

வாழ்க்கையின் லட்சியங்களிலிருந்து தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன் சனிராகுவும் 12ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத் திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்கள் துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நெருக்கடிகள் நிலவும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம 15-11-2013 காலை 10.58 மணிமுதல் 
17-11-2013 மாலை 06.45 மணிவரை

டிசம்பர்

காலத்தை வீணடிக்காமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 2ல் சனிராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஜென்ம ராசிக்கு 3ல் மாத முற்பகுதியில் சூரியன் சஞ்சரிப்பதால் நிலமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். முன்கோபத்தால் தேவையற்ற விரோத ங்களை சந்திக்க வேண்டிய காலம் என்பதால் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கடன்களும் அதிகரிக்கும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 12-12-2013 மதியம் 06.46 மணிமுதல் 
15-12-2013 அதிகாலை 02.21 மணிவரை

உத்திரம் 2,3,4ம் பாதங்கள்

நன்றி மறவாத நல்ல குணம் உத்திர அன்பர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சனி ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை குறைக்குத் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் முற்பாதியில் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது.

அத்தம்

மற்றவருக்கு உதவி செய்ய கூடிய பண்பு கொண்ட அத்த அன்பர்களே! உங்களுக்கு ஏழரை சனியில் குடும்ப சனி நடைபெறுவதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் விரயத்தையும், பிரச்சனை களையும் ஏற்படுத்துவார்கள். பணவரவுகள் தேவை க்கேற்றபடி இருக்கம். பொன், பொருள் சேரும். கொடு க்கல், வாங்கலில் மட்டும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.

சித்திரை 1,2,3ம் பாதங்கள்

ஆடை அணிகலங்கள் அதிக ஆர்வம் கொண்ட சித்திரைநேயர்களே! ஆண்டின் முற் பகுதியில் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். என்றாலும் ஏழரை சனி நடைபெறுவதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளாலும் நிம்மதி குறையும். எதிலும் சிந்தித்து கவனமுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 4,5,6,7,8 கல் - மரகத பச்சை  
நிறம் - பச்சை, நீலம் திசை - வடக்கு 
கிழமை - புதன், சனி தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

பரிகாரம்
ஏழரை சனியில் பாத சனிதொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. ஜென்ம ராசிக்கு 2ல் ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற் கொள்வது நல்லது. 28-05-2013 முதல் குரு 10ல் சந்திப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.




No comments: